Breaking News

நவ.11, 12-ம் தேதிகளில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை; பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார்: வார்டு வாரியாக பணிக் குழுக்கள் அமைப்பு

வட கடலோர மாவட்டங்களில் வரும் 11, 12 தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழைக் காலத்தில் சென்னைக்கு சராசரியாக 43 செமீ, வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 76 செமீ மழைகிடைக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் 66 செமீ மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட 23 செமீ அதிகம். இதனால் மாநகரப் பகுதியில் உள்ள 210 நீர்நிலைகளிலும் இப்போதே நீர் நிறைந்துள்ளது. நிலமும் தனது நீர் உறிஞ்சும் திறனில் பெரும்பகுதியை எட்டிவிட்டது. இதற்கு மேல் மழை பெய்தால், அது வெள்ளமாக மாறவும் வாய்ப்புள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31Ef0NC
via

No comments