Breaking News

திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு: பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறுபகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

சென்னை மற்றும் மாநிலம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி முதல் நேரில் பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி, பத்மாவதி நகரில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்து, மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/317KwDx
via

No comments