இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் வெளியிட்ட கட்டிடத் தொழிலாளி கொலை
கோவையில், இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் தனது புகைப்படத்தை வெளியிட்ட கட்டிடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள, காந்தி மாநகரைச் சேர்ந்தவர் அசோக்குமார்(28). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் பெண் குழந்தை உள்ளனர். அசோக்குமாருக்கும், பக்கத்து வீதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்னர் அசோக்குமார், அரிவாளை முதுகில் வைத்தபடி, எங்க ஏரியாவில் வந்து போட்டுப் பாருங்க என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் பதிவிட்டு இருந்தார். இது அவருடன் முன்னரே தகராறில் இருந்த பக்கத்து வீதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தங்களை மறைமுகமாகக் குறிப்பிட்டுத் தான் அவர் பதிவிட்டுள்ளதாகவும் அவர்கள் எண்ணியதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qaOyp2
via
No comments