அரியலூரில் சோகம்: குளத்தில் மூழ்கி இரு குழந்தைகள் பலி
தீபாவளியைக் கொண்டாடப் பாட்டிக்கு வீட்டுக்கு வந்த இரு குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது அரியலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர், மறுக்காலங்குறிச்சி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடத் தனது மகள் ஹரிணி (7) மற்றும் தம்பி மகன் லோகேஷ் (6) ஆகிய இருவரையும் கடந்த 3-ம் தேதி விட்டுவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் 2 குழந்தைகளும் மறுக்காலங்குறிச்சி கிராமத்தில் உள்ள சில சிறுவர்களுடன் சேர்ந்து பாட்டி வீட்டிற்கு அருகிலுள்ள குளத்துக்கு அருகே நேற்று மாலை (நவ.4) விளையாடிக் கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3GT9IOo
via
Post Comment
No comments