Breaking News

வேட்டங்குடி சரணாலயத்தில் குவிந்துள்ள பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி சரணாலயத்தில் அதீத சப்தம் காரணமாக பறவைகளுக்கும், குஞ்சுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் கிராம மக்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவில்லை.

திருப்பத்தூா் அருகே வேட்டங்குடி சரணாலயத்தில் கொள்ளுகுடிப்பட்டி கண்மாயில் 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பா் மாத இறுதி, அக்டோபா் மாதங்களில் பல ஆயிரக்கணக்கான வெளிநாடு மற்றும் வெளி மாநில பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வருவதுவழக்கம். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அப்பறவைகள் குஞ்சுகளுடன் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3028UWQ
via

No comments