Breaking News

உண்டியல் வசூலை காரணம் காட்டி கோயில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க முடியாது: உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டும் இந்து அமைப்புகள்

உண்டியல் வசூலை காரணம் காட்டி எந்தஒரு கோயிலையும் அறநிலையத் துறை தனதுகட்டுப்பாட்டில் எடுக்க முடியாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டும் இந்து அமைப்புகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சட்டப்படியான அறங்காவலர்களை உடனே நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில் 1983-ம் ஆண்டு ஸ்ரீவரசித்தி விநாயகர் சத்சங்கம் சார்பில் உருவாக்கப்பட்டது. இக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கடந்த 2014முதல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, செயல் அலுவலரையும் நியமித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bPzJjj
via

No comments