Breaking News

கணக்கில் வராத ரூ.2.27 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 26 நாளுக்கு பிறகு பொதுப்பணி துறை செயற்பொறியாளர் வேலூரில் கைது: லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை

வேலூர் மற்றும் ஓசூரில் லஞ்சஒழிப்புப் போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.2.27 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா 26 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொதுப்பணித்துறை வேலூர் கோட்ட தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, செயற்பொறியாளராக கடந்த 2 ஆண்டுகளாக ஷோபனா (57) என்பவர் பணியாற்றி வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3G0OAUZ
via

No comments