Breaking News

கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரி நிறுத்த இடம் ஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் சிஎம்டிஏ தகவல்

கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகள் நிறுத்த உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இடம் ஒதுக்கப்பட்டு விட்டதாக சிஎம்டிஏஅதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட தக்காளி மைதானத்தை திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ‘‘தொடர் மழை மற்றும் வெளி மாநில தக்காளி லாரிகளை நிறுத்த போதுமான இடவசதியின்மை போன்ற காரணங்களால் தக்காளி வரத்து குறைந்து, விலையும் கடுமையாக உயர்ந்து வருவதாகவும், மூடியுள்ள மைதானத்தை திறந்து தக்காளி லாரிகளை நிறுத்திபொருட்களை இறக்கி, ஏற்ற அனுமதி அளித்தால் விலை வெகுவாக குறையும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தற்காலிக ஏற்பாடாக நவ.30-ம் தேதி அதிகாலை 4 மணிமுதல் 4 வாரங்களுக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் வெளி மாநில தக்காளி லாரிகளை நிறுத்தி லோடுகளை இறக்கி, ஏற்ற ஓர் ஏக்கர் இடத்தை சிஎம்டிஏ மற்றும் கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி அதிகாரிகள் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்’’என நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZIKQIs
via

No comments