Breaking News

புதுச்சேரிக்கு 6 லாரிகளில் வந்த 1.5 லட்சம் கிலோ தரமற்ற அரிசி திருப்பி அனுப்பி வைப்பு

புதுச்சேரிக்கு 6 லாரிகளில் வந்த 1.5 லட்சம் கிலோ தரமற்ற அரிசி திருப்பி அனுப்பப்பட்டன.

தீபாவளியையொட்டி மாநிலத் தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் துறை, அரிசி மற்றும் சர்க்கரை கொள்முதல் செய்வதற்காக பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் டெண்டர் கோரியது. இருப்பினும் தீபாவளிக்கு குறுகிய நாட்களே இருந்ததாகக்கூறி பரிசு பொருட்கள் வழங்கப்படவில்லை. தீபாவளி முடிந்து மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் இலவச அரிசி, சர்க்கரை வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pimxtw
via

No comments