Breaking News

48 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி: குன்னூர், தாராபுரத்தில் 4 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

குன்னூர், தாராபுரத்தில் உள்ள 4 பள்ளிகளில் படிக்கும் 48 மாணவ, மாணவிகளுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள், தனியார் தங்கும் விடுதியில் தங்கி பள்ளிக்குச் சென்று வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் அவர்களில் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாணவிகள் அனைவரும் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, அரசு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3G7uEzS
via

No comments