Breaking News

வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடுக்கு அனுமதி கோரி அதிமுக சார்பில் மனு

வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் அரசுடமையாக்கி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் அதை கையகப்படுத்தி, அரசுடமையாக்கி கடந்த அதிமுக அரசு உத்தரவுகளை பிறப்பித்தது. வேதா நிலையம் இல்லத்துக்கான இழப்பீட்டுத்தொகையும் நீதிமன்றத்தில் அரசு சார்பில் செலுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31klwci
via

No comments