Breaking News

கோயம்பேட்டில் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பேராசிரியர் கைது

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் தமிழ்ச்செல்வன்(40). கல்லூரி மாணவிகளுக்கு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியான குறுந்தகவல்கள் அனுப்பியதாகவும், மாணவி ஒருவருக்கு நேரடியாக பாலியல் தொல்லை அளித்ததாகவும் அவர் மீது மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கோயம்பேடு சரக உதவி ஆணையர் ரமேஷ்பாபு தலைமையில் கோயம்பேடு பேருந்து நிலைய காவல் ஆய்வாளர் குணசேகர், கோயம்பேடு காவல் ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31m4Hxk
via

No comments