Breaking News

கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வாடகை நிர்ணயம்; தலைமைச் செயலாளர் தலைமையில் குழு: நிலையான வழிகாட்டு முறைகளை வகுக்கவும் திட்டம்

சென்னை: கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு நியாயமான வாடகை நிர்ணயம் செய்வதில் நிலவும் முரண்பாடுகளை களைய தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான வீடுகள், மனைகள், கட்டிடங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றுக்கு 2001-ம் ஆண்டு நிலமதிப்பு நிலவரத்தை அடிப்படையாக கொண்டு, கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியில் இருந்து நியாய வாடகை நடைமுறைப்படுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Jl4In4
via

No comments