Breaking News

ஊரக உள்ளாட்சி பதவியை ராஜினாமா செய்யாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் தகுதி நீக்கம்: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் ஊரக உள்ளாட்சி பதவி தகுதி நீக்கம் செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் கடந்த 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மறைமுக தேர்தல் மூலம் மொத்தம் 1,298 பதவிகளுக்கு, அதாவது மாநகராட்சி மேயர், துணை மேயர், நக ராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gaUxWuivc
via

No comments