Breaking News

குடியரசு தின விழாவின்போது எழுந்து நிற்காததால் சர்ச்சை: ‘தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடல் என்பதை உணர்கிறோம்’ - அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்த நிலையில் ரிசர்வ் வங்கி விளக்கம்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப்பாடல் என்பதை உணர்வதாக இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகம் அருகில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிமண்டல அலுவலகத்தில் 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்எம்என் சுவாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சிமுடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, ரிசர்வ் வங்கி பெண் அதிகாரி உட்பட சிலர் உட்கார்ந்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ABAtEp
via

No comments