Breaking News

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேகம் தொடங்கியது; வடபழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்

சென்னை: வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேகம் தொடங்கிய நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை வடபழனி முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு 23-ம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. முழு ஊரடங்கு அமலில் இருந்த சூழலிலும், ஏராளமான பக்தர்கள் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் நின்று, கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AvGdzj
via

No comments