மழை பெய்தால் ஒழுகும் வாடகை கட்டிடத்தில் நீதிமன்றங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் தற்போது உயர் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றங்களையும் சேர்த்து மொத்தம் 1,280 நீதிமன்றங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் சென்னை மாநகரில் 144 நீதிமன்றங்களும், பிற பகுதிகளில் 1,136 நீதிமன்றங்களும் உள்ளன. அந்தந்த காவல் நிலைய வரம்புக்கு உட்பட்ட குற்றவியல் வழக்குகளை விசாரிக்க மாநிலம் முழுவதும் 32 தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் உள்ளன.
17 தொழிலாளர் நல நீதிமன்றங்கள், ஒரு தொழில் வழக்கு தீர்ப்பாயம், திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் குடிமை உரிமைகள் பாதுகாப்பு சட்ட நீதிமன்றங்கள், பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர் தொடர்பான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 13 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள், பொருளாதார குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னையில் 2, மதுரையில் 1 என 3 சிறப்பு நீதிமன்றங்கள் அடங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tYbIRo
via
No comments