Breaking News

1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு; அனைத்து மாணவர்களுக்கும் இன்று முதல் நேரடி வகுப்புகள்: கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்புவரையிலான வகுப்புகள் மற்றும்கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இன்று (பிப்.1) முதல் நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு அனைத்துமாணவர்களும் அறிவுறுத்தப்பட் டுள்ளனர்.

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜன.3-ம் தேதி திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால், கரோனாவின் புதிய வடிவமான ஒமைக்ரான் பரவத் தொடங்கியதால் பள்ளிகளுக்கு ஜன.31 வரை தொடர் விடுமுறை விடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Z8WsxjUnX
via

No comments