Breaking News

உளுந்தூர்பேட்டை: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு - கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்?

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை பகுதியில் 100 நாள் வேலை தொடர்பாக குறித்து கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞரை ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் தாக்கியதாகவும், தாக்கியவரை விடுத்து தாக்குதலுக்கு உள்ளான இளைஞரையே போலீஸ் கைது செய்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எஸ்.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (34). இவர் அப்பகுதியில் இ.சேவை மையம் நடத்தி வருகிறார். நேற்று மலையனூர் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சாலையில் 100 நாள் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு சென்று முறைகேடுகள் தொடர்பாக கேள்விகேட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கிருந்தவர்களுக்கும், ராமருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற எலவனாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி, ராமரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, அவர் மீது வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்துள்ளார். இதனையடுத்தது கிராம மக்கள் காவல் நிலையத்தில் திரண்டதால் அங்கு சலசலப்பு உருவானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5hMyQvP
via

No comments