தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை: படகுகளை அரசுடமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தும், மீனவர்களின் படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை நாட்டுடமையாக்கியும் பருத்தித்துறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 12 மீனவர்களும், காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 9 மீனவர்களும் கடந்த ஜனவரி 31 அன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Gs7kPcy
via
No comments