கோயில் கும்பாபிஷேகத்துக்கு சீர் வழங்கிய முஸ்லிம்கள்
ஆர். புதுப்பட்டினம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், முஸ்லிம் மக்கள் சீர்வரிசை வழங்கியது மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக அமைந்தது.
ஆர்.புதுப்பட்டினம் வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா பிப்.17-ல் கணபதி ஹோமம், யாக சாலைபூஜைகளுடன் தொடங்கி நடைபெற்றன. நேற்று 6-ம் காலயாகசாலை பூஜைக்குப் பின்பு மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி மற்றும் சித்தி விநாயகர், மகாலட்சுமி, இடும்பன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Re6kbE0
via
No comments