Breaking News

‘இந்து தமிழ் திசை’, பெருந்துறை நிவேதா கலை கைவினைக் கழகம் நடத்தும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம்; பிப்.24-ல் தொடக்கம்: 3 நாட்கள் பயிற்சியில் பூ வேலைப்பாடுகள் கற்றுத் தரப்படும்

சென்னை: அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் விதமாக, ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் பல்வேறுசெயல்பாடுகளை இணையம்வழியாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பெருந்துறை நிவேதா கலைமற்றும் கைவினைக் கழகத்துடன்இணைந்து, பூ வேலைப்பாடுகளைக் கற்றுத்தரும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கை 3 நாட்கள்நடத்துகிறது. அதன்படி பிப்.24, 25, 26ஆகிய நாட்களில் மாலை 6.00 முதல்7.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஓரிகாமி பயிலரங்கில் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் முதல், பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளும் பங்கேற்கலாம். இந்தப் பயிலரங்கை நடத்தவுள்ள நிர்மல்குமார், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகஓரிகாமி பயிற்சிகளைத் திறம்பட நடத்தி வருபவர். இந்த பயிலரங்கில் 10-க்கும் மேற்பட்ட கைவினைப் பணிகளைக் கற்றுத்தர உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/089Ox7H
via

No comments