Breaking News

திட்ட வரைவை மத்திய அரசிடம் அளித்துள்ளோம்; சுற்றுலாத் துறையை மேம்படுத்தப்போகிறோம்: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

புதுவை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சில திட்டவரைவுகள் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்குஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளதால் புதுச்சேரி மாநில பொருளாதாரம் உயரும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுடுகளிமண் சிற்பப் பூங்காவினை துணை நிலை ஆளுநர் தமிழிசை நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், கலை மற்றும் கைவினை கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள 40 கிலோவாட் சூரிய சக்தி உற்பத்தி நிலையத்தையும் தொடக்கி வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WpAQ7Nm
via

No comments