Breaking News

சாலையோரத்தில் கிடந்த வெள்ளி அம்மன் சிலை

சென்னை: சென்னை மாநகராட்சி 137-வது வார்டுக்கு உட்பட்ட ராமசாமி சாலையில் நேற்று காலை துப்புரவுப் பணியாளர் அம்மு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில் கிடந்த பையை எடுத்துப் பார்த்துள்ளார். அதில், வெள்ளியால் செய்யப்பட்ட, சூலம் ஏந்திய அம்மன் சிலை இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து துப்புரவு ஆய்வாளரிடம் அம்மு தெரிவித்தார். அங்கு வந்த துப்புரவு ஆய்வாளர் வெள்ளி சிலையை, கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அது யாருடையது என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ygku6Yl
via

No comments