Breaking News

பிரச்சாரக் களத்தில் ஒதுங்கும் முக்கிய நிர்வாகிகள்: கலக்கத்தில் மதுரை மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள்

மதுரை: மாநகர செயலாளர் செல்லூர் கே.ராஜூவுடனான கோஷ்டி பூசலால் ஒதுங்கி நிற்கும் மாநகர முக்கிய நிர்வாகிகள் கடைசி நேரத்தில் ஏதாவது உள்ளடி வேலைப்பார்பார்களோ என்ற கலக்கத்தில் மதுரை மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மதுரை மாநகராட்சி அதிமுக மேயராக 2011-2016-ம் ஆண்டு வரை விவி.ராஜன் செல்லப்பா இருந்தபோது, மாநகர செயலாளராக இருந்த செல்லூர் கே.ராஜூ அமைச்சராகவும் இருந்தார். அதனால், மாநகர அதிமுகவில் இருவரும் இரு பெரும் கோஷ்டியாக செயல்பட்டனர். மாநகரத்தில் நடந்த மாநகராட்சி விழாவுகளுக்கு மேயர் ராஜன் செல்லப்பா செல்லூர் கே.ராஜூவை அழைக்க மாட்டார். அப்படியே அரசு விழாவுகளில் இருவரும் ஒரே கலந்து கொண்டாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளமாட்டார்கள். அந்தளவுக்கு இருவரும் மாநகர அதிமுகவில் ஜெயலலிதா இருந்த காலத்திலே எதிரும், புதிருமாக அரசியல் செய்தனர். இந்த இருவரையும் சார்ந்து மாநகர கட்சி நிர்வாகிகளும் இரு கோஷ்டிகளாக செயல்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HN0Pb2T
via

No comments