Breaking News

நலிவடையும் தீப்பெட்டி தொழில் வரிச் சலுகை அளிக்க வேண்டும்: வி.கே.சசிகலா வலியுறுத்தல்

சென்னை: வி.கே.சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தொடர் மழை, மூலப் பொருட்களின் விலையேற்றம், 18 சதவீத வரி போன்ற காரணங்களால் தீப்பெட்டித் தொழில் நலிவடைந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய பட்ஜெடில் தீப்பெட்டி உற்பத்திக்கு எவ்வித வரிச் சலுகையும் அளிக்கப்படவில்லை. மேலும், வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்யும்போது வழங்கப்படும் ஊக்கத்தொகையை 7 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. அதேபோல, இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கான வரி 3 முதல் 4 மடங்கு அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PhN1aGz
via

No comments