நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நிறைவு: சில சலசலப்புகள்... பெரும்பாலும் அமைதி... - ஒரு பார்வை

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் சலசலப்புகள் அரங்கேறிய நிலையில், பெரும்பாலும் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு நிறைவுக்குப் பின், வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, அவை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. வரும் 22-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. மாலை 5 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் - மாவட்ட வாரியாக: அரியலூர் - 75.69%, செங்கல்பட்டு - 37.99%, சென்னை - 41.68%, கோயம்புத்தூர் - 56%, கடலூர் - 57.58%, தர்மபுரி - 65.68%, திண்டுக்கல் - 57.84%, ஈரோடு - 54.88%, கள்ளக்குறிச்சி - 61.07%, காஞ்சிபுரம் - 52.88%, கன்னியாகுமரி - 50.44%, கரூர் - 63.56%, கிருஷ்ணகிரி - 52.61%, மதுரை - 42.70%, மயிலாடுதுறை - 51.97%, நாகப்பட்டினம் - 54.15%, நாமக்கல் - 64.19%, பெரம்பலூர் - 55.58%, புதுக்கோட்டை - 57.37%, ராமநாதபுரம் - 65.06%, ராணிப்பேட்டை - 54.53%



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G2hRri6
via

No comments