சசிகலா, அப்போலோ தரப்பு வழக்கறிஞர்களுடன் - ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை: மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், சசிகலாமற்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்த நிலையில், இந்த வழக்கில் உரிய மருத்துவக் குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2019-ம் ஆண்டு வழக்குதொடரப்பட்டது. இதையடுத்து, இந்த ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்தது. தற்போது ஆணையத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/H5ujMKJ
via
No comments