பாடம் நடத்த பேராசிரியர்கள் இல்லை; அடிப்படை வசதிகள் இல்லை: சட்டக்கல்லூரி மாணவர்கள் புதுவை சட்டப்பேரவையை முற்றுகை- ஒரு மாதத்தில் அனைத்தும் சரி செய்யப்படும் என முதல்வர் உறுதி

புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரியில் போதிய பேராசிரியர்கள் நியமனம் செய்வது உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவ.மாணவிகள் சட்டப்பேரவையை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் முதல்வரை சந்தித்து தங்கள் கோரிக்கைளை முன்வைத்தனர். அதை ஒரு மாதத்தில் நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

புதுவை காலாப்பட்டு டாக்டர்அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் போதிய பேராசிரியர்கள் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் நிலவுகிறது. சென்னை உயர்நீதிமன்றமும், புதுச்சேரி பல்கலைக்கழகமும் அறிவுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/P5OEvhf
via

No comments