Breaking News

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜன.28-ம் தேதி தொடங்கியது. முதல் 3 நாட்களில் குறிப்பிடும்படியாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. முக்கிய கட்சிகளின் கூட்டணிகளில் இடப் பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்ட நிலையில், 2 நாட்களாக வேட்புமனுக்கள் அதிக அளவில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2-ம் தேதி வரை 10,153 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. நேற்றும் ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5kThj7t
via

No comments