Breaking News

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; பிரச்சாரம் சூடு பிடிக்கிறது: பறக்கும்படை கண்காணிப்பு தீவிரம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம் அமைத்துள்ள பறக்கும் படையினர், நடத்தை விதிமீறல்கள் நடக்கிறதா என தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டுள்ளன.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12 ஆயிரத்து 838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந் தெடுப்பதற்காக நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தல், பிப்.19-ம் தேதி ஒரேகட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LY9jKiz
via

No comments