திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் தொடரும்: தமிழகத்தில் இன்று முதல் நர்சரி பள்ளி திறப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமலாகிறது. குறிப்பாக, பொது நிகழ்ச்சிகள், திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மட்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்தது. இதையடுத்து, ஜன6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு, ஜன.9, 16, 23 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், கரோனா பாதிப்பு குறைந்ததாலும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகியவை ரத்து செய்யப்பட்டன. வழிபாட்டுத்தலங்களில் வார இறுதி நாட்களில் விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FjMgQat
via
No comments