Breaking News

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு: மக்கள் கடும் அதிருப்தி

சென்னை: கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் வேதனை அடைந் துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FXQj0Hz
via

No comments