Breaking News

தி.மலை உழவர் சந்தையில் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை அங்காடிக்கு விருது: சுகாதாரமான காய்கறி, பழம் விற்பனைக்கு பாராட்டு

திருவண்ணாமலை உழவர் சந்தை யில் தரமான பழம் மற்றும் காய் கறிகளை விற்பனை செய்த உணவு பாதுகாப்புத் துறை அங்காடிக்கு மத்திய அரசு விருது வழங்கி பாராட்டியுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு ஆணையரகத்தின் சுகாதார பழம் மற்றும் காய்கறி சந்தை எனும் திட்டம், திருவண்ணாமலை உழவர் சந்தையில் செயல்படுத்தப் படுகிறது. தி.மலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மேற்பார்வையில் அங்காடி இயங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் சுகாதாரமான காய்கறிகள் மற்றும் பழங்கள், மக்களுக்கு விற் பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனையாகும் காய்கறிகள், பழங்களின் மாதிரிகள் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அரசாங்கம் நிர்ணயித்த அளவில் உரம் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுவது உறுதி செய் யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VN5v01l
via

No comments