Breaking News

சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுரை

சென்னை: மாணவர்கள் சுய ஒழுக்கத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என டெல்லி குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்றதமிழக என்எஸ்எஸ் மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: டெல்லியில் கடந்த ஜன.26-ம்தேதி குடியரசு தினத்தன்று நடைபெற்ற அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் (என்எஸ்எஸ்) 14 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கான குடியரசு தின அணிவகுப்பு பயிற்சி முகாம் டெல்லியில் கடந்த ஜன.17 முதல் 25 வரை நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RLhS9eX
via

No comments