திருவண்ணாமலை மாவட்டத்தில் மகப்பேறு மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

தி.மலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கண்ணக்குருக்கை, மேல்கரிய மங்கலம், பிஞ்சூர், மேல் ஆணைமங்கலம், ஆலப்புத்தூர், கொட்டாவூர், அரியப்பாடி, வெட்டியந் தொழுவம், சங்கீதவாடியில் தலா ரூ.20 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், சந்தவாசல் மற்றும் ஆனந்தல் கிராமத்தில் தலா ரூ.60 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம் என 11 சுகாதார நிலையங்களில் கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் நார்த்தாம்பூண்டி, ஆவூரில் தலா ரூ.60 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டுதவற்கான அடிக்கல் நாட்டு விழா (மொத்தம் ரூ.4.20 கோடி) செங்கம் அருகே கண்ணக்குருக்கை கிராமத்தில் நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2MqE6Df
via
No comments