பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சுடும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுட்ட பக்தர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் காவடி உற்சவம் நேற்று காலை நடை பெற்றது. மேலும், கலசப்பாக்கம் அடுத்த வில்வாரணியில் உள்ள முருகர் கோயில், திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடியில் உள்ள முருகர் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகர் கோயில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G14qrps
via
No comments