Breaking News

மகா தமனி பாதிப்பால் இதயத்தில் ரத்தக் கசிவு: அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஏழை விவசாயிக்கு சவாலான சிகிச்சை

சென்னை: மகா தமனி பாதிப்பால் இதயத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்த ஏழை விவசாயிக்கு, மிகவும் சாவாலான சிகிச்சை அளித்து சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

வேலூரைச் சேர்ந்த ஏழை விவசாயி கஜேந்திரன் (73). கடும் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட இவர், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவரது இதயத்தின் மகா தமனியின் கீழ்ப்பகுதியில் கிழிசல் ஏற்பட்டிருந்ததும், அதனால், இதயத்துக்குள்ளே ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது. மேலும், தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wgAvbKu
via

No comments