ஆளுநர் கான்வாய் தாக்குதல்: 'சட்ட விரோதமாக மிரட்டலாம் என நினைக்கிறார்கள்' - அமித் ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: "தமிழக ஆளுநரின் கான்வாய் மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதல் முன்னெப்போதும் இல்லாதது. கடந்த சில நாட்களாக நாங்கள் எச்சரித்தும் தமிழக முதல்வர் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மாநிலத்தில் மோசமடைந்துள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை குறித்த ஆழ்ந்த கவலையில் இந்த கடிதத்தை எழுதுகிறோம். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கடந்த மூன்று நாட்களாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை தருமபுரி ஆதினத்தை சந்திக்க செல்லும் வழியில், திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக் கொடி காட்டியதுடன், கொடி கம்பங்களையும், கற்களையும், தண்ணீர் பாட்டில்களையும் கான்வாய் மீது வீசினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rCHJvy5
via
No comments