மீனாட்சியம்மன் கோயில் ‘ஸ்மார்ட் சிட்டி’சாலைகளில் தொங்கும் மின்வயர்கள்: கம்பியில்லா மின்சார திட்டம் என்ன ஆனது?

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள ஸ்மார்ட் சிட்டி சாலைகளில் மின்சார வயர்கள் அலங்கோலமாக தொங்கிக் கொண்டிருப்பது கம்பியில்லா தடையற்ற மின்சார கட்டமைப்பு திட்டம் என்ன ஆனது என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளது
நாட்டின் முக்கியமான 100 நகரங்களை தேர்வு செய்து அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் நோக்கமாக இருந்தது. அப்படி உருவாக்கும் ‘ஸ்மார்ட் சிட்டி’ நகரங்களில் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அனைத்து கட்டமைப்பு வசதிகள், கம்பியில்லாத தடையற்ற மின்சாரம், சுத்தமான குடிநீர், பளபளக்கும் சாலைகள், பார்க்கிங் வசதிகள், டிஜிட்டல் மயமான பொதுச் சேவைகள் ஆகியவற்றை கிடைக்க செய்து தொழில்நுட்ப ரீதியில் நகரை மறுசீரமைப்பதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதனால், இந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் அதற்கு தேர்வான நகரங்களின் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wa7Dj2g
via
No comments