‘கமல் குருதிக்கொடை குழு’ அமைப்பு - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தகவல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எனது நற்பணி இயக்கத்தினர் கடந்த 40 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் ரத்தம் தானமாக வழங்கி, எண்ணற்ற உயிர்களைக் காத்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரத்ததானம் வழங்கும் நற்பணி இயக்கத்தினரை தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைத்து, மாநிலம் முழுவதும் ரத்தம் தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் ‘கமல் குருதிக்கொடை குழு’ உருவாக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kacedOP
via
No comments