Breaking News

ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது - சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

சென்னை: ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டமும், அதன்மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்ததும் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுகவில் ஜூன் 23-க்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்த நிலையில், கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் பாதியிலேயே வெளியேறினார். அதன்பின், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டு, ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/16GDtWA
via

No comments