ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சமர்ப்பிப்பு - நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிக்கையை முன்வைக்க முதல்வர் உத்தரவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான 608 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை, முதல்வர் ஸ்டாலினிடம் விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சமர்ப்பித்தார். நாளை (ஆக. 29) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், அந்த அறிக்கையை முன்வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 டிசம்பர் 5-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா உயிரிழந்தார். பின்னர், சசிகலா, பழனிசாமி ஆகியோருக்கு எதிராகக் குரல் கொடுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் 2017-ல் வலியுறுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WzQnIaM
via
No comments