Breaking News

டபிள்யூடிஏ பைனலில் ஸ்வியாடெக், ஜபிர்

லண்டன்: 2022-ம் ஆண்டு சீசனில் டென்னிஸ் தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள ஜோடிகளும் கலந்து கொள்ளும் டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற உள்ளது. இந்த மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு (டபிள்யூடிஏ) நடத்துகிறது.

இந்நிலையில் இந்தத் தொடருக்கு முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 2-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபிர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளதாக டபிள்யூடிஏ அறிவித்துள்ளது. இதேபோன்று இரட்டையர் பிரிவில் பார்போரா கிரெஜ்சிகோவா, கேத்ரினா சினியாகோவா ஜோடி தகுதி பெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wbX1vGQ

No comments