Breaking News

மகளிர் வீராங்கனைகளின் திறனை கண்டறிய தேர்வு முகாம்: டிஎன்சிஏ சார்பில் மே 13 முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமானது (டிஎன்சிஏ), மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் வகையில் திறமையான வீராங்கனைகளை கண்டறிவதற்காக ஒரு குழுவை உருவாக்கியுள்ளது. இதில் சிறந்த முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளனர். இதற்காக தலா 4 உறுப்பினர்களைக் கொண்ட நான்கு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் மூலம் 37 மாவட்டங்களிலும் சிறந்த வீராங்கனைகள் அடையாளம் காணப்பட உள்ளனர்.

நான்கு குழுக்களும் மே 13 மற்றும் 14-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம்,நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி,மதுரை, தேனி, கரூர், திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 16 மாவட்டங்களில் வீராங்கனைகளை தேர்வு செய்ய உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TUvbhSk

No comments