Breaking News

நவம்பர், அக்டோபருக்கு அடுத்தபடியாக மே மாதத்தில்தான் அதிகபட்ச புயல்கள் - வங்கக்கடலில் நாளை உருவாகிறது ‘மொக்கா’

சென்னை: கோடை காலம் என்றால் வெயில் வாட்டுவது மட்டுமல்ல. புயலும் வரும். தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடலில் நவம்பர், அக்டோபருக்கு அடுத்தபடியாக மே மாதத்தில் அதிக புயல்கள் உருவாகியுள்ளன என்று வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, படிப்படியாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் உருவானால், இதற்கு ஏமன் நாடு பரிந்துரை செய்துள்ள ‘மொக்கா’ என பெயரிடப்படும். மொக்கா என்பது அந்நாட்டில் உள்ள துறைமுக நகரத்தின் பெயர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OS5RVtP
via

No comments