Breaking News

டி 20 உலகக் கோப்பை | மழை மிரட்டலுக்கு இடையே இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

மெல்பர்ன்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஐசிசி நடத்தும் தொடர்களில் தோனி தலைமையிலும் அதற்கு முன்னரும் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது இல்லை. இதற்கு கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் முடிவு கட்டப்பட்டிருந்தது. இந்தியாவுக்கு எதிராக ஷாகீன் ஷா அப்ரிடியின் மிரட்டலான தொடக்க ஓவர் பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி முதன்முறையாக வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AlnBiOm

No comments