Breaking News

திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: 7 எஸ்பிக்கள் தலைமையில் 3,000 போலீஸார் பாதுகாப்பு

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவில் இன்று மாலையில் சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ம் தேதி தொடங்கியது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (30-ம் தேதி) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற பூஜைகள் நடைபெறுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/glcHhWS
via

No comments