Breaking News

கோவை | உயிரிழந்த நபரின் வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டு மருந்துகள் பறிமுதல்: டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் தெரிந்தது. அவரது வீட்டில் சோதனை நடத்திய போது, நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு கோவையில் ஞாயிறு (24-ம் தேதி) இரவு 8 மணிக்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது. காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் உயிரிழப்பு, வெடிபொருள் தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EbPNOJ0
via

No comments