Breaking News

புலி உடம்பிலும் வரிகள் இருக்கும்; பூனை உடம்பிலும் வரிகள் இருக்கும் | தோனியுடன் இஃப்திகார் அகமதை ஒப்பிட்ட அஜ்மல்

பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் இஃப்திகார் அகமது, முன்னாள் இந்திய கேப்டன் தோனியை போல விளையாடுகிறார். ஆனால் தோனி வசம் உள்ள அந்த ஒரு திறன் இஃப்திகார் அகமதிடம் இல்லை என தெரிவித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சையது அஜ்மல். அவரது இந்த ஒப்பீடு புலி மேலையும் கோடு இருக்கு, பூன மேலையும் கோடு இருக்கு என்ற வகையில் உள்ளது.

“இஃப்திகார் அகமது, தோனியை போல விளையாடுகிறார். ஆனால் இறுதிவரை களத்தில் நின்று அணிக்கு சாதகமாக ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் தோனியை போல அவரது ஆட்டம் அமையவில்லை. வழக்கமாக தோனி சிங்கிள் எடுப்பார். அதே நேரத்தில் இறுதி ஓவர்களில் சிக்ஸர் விளாசி அதை ஈடு செய்வார். பாகிஸ்தான் அணியிலோ இஃப்திகார் முதல் பத்து பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் டாட் பால்களாக ஆடுகிறார். அதற்கு ஈடு செய்யும் வகையில் பெரிய ஷாட் ஆடும் போது விக்கெட்டை இழக்கிறார். இதையே தான் ஷான் மசூதும் செய்கிறார். 27 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட் ஆகிறார்” என விமர்சித்துள்ளார் அஜ்மல்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Eu5XUCA

No comments